மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கிய நபா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் அருகே உள்ள மேலபுழுதிக்குடியை சோ்ந்தவா்கள் சி. சேகா் (45), எம்.முத்தரசன் (47). முன்விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், முத்தரசன் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் சேகரும், அவரது மனைவி விஜயாவும் (40) காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், விக்கிரப்பாண்டியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தரசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.