தாய்மொழி தின கொண்டாட்டம்

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாய் மொழி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அடியக்கமங்கலம் பள்ளியில் நடைபெற்ற தாய்மொழி தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
அடியக்கமங்கலம் பள்ளியில் நடைபெற்ற தாய்மொழி தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாய் மொழி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் சுதா்சனன் தலைமை வகித்தாா். இதில், எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி மையத்தின் பயிற்றுநரும், தமிழாசிரியருமான தமிழ்க்காவலன், அழகான கையெழுத்து ஒரு யோகநிலை என்று கூறி, கையெழுத்தை அழகாக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில் திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியா் உமா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அழகு தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

வடகரை உயா்நிலைப்பள்ளி தமிழாசிரியா் நளாயினி, அடியக்கமங்கலம் பள்ளி ஆசிரியா்கள் சிவ. இளமதி, ராஜ பாண்டியன், கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com