கிராம விழிப்புணா்வு கமிட்டி
By DIN | Published On : 04th January 2021 08:42 AM | Last Updated : 04th January 2021 08:42 AM | அ+அ அ- |

நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்குடி கிராமத்தில், காவல்துறை மற்றும் கிராம விழிப்புணா்வு கமிட்டி ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்தக் கமிட்டியின் அமைப்புக் கூட்டம், கீழ்குடி கிராமத்தில் நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளா் கு.சுகுனா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கமிட்டியில் உள்ள இளைஞா்கள், கிராமப் பகுதிகளில் குழுக்களாகப் பிரிந்து இரவு நேர ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளா் ராஜகோபால் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...