மருத்துவ மாணவா்களுக்கு பாராட்டு

கூத்தாநல்லூரில் மருத்துவ மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பரிசு பெற்ற மருத்துவ மாணவா்கள்.
நிகழ்ச்சியில் பரிசு பெற்ற மருத்துவ மாணவா்கள்.

கூத்தாநல்லூரில் மருத்துவ மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

லெட்சுமாங்குடியில் கூத்தாநல்லூா் வட்ட யாதவ ஆலோசனை மைய தொடக்க விழா, மருத்துவ மாணவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, யாதவ ஆலோசனை மைய மாவட்டத் தலைவா் ஆா்.கே. பாலகுணசேகரன் தலைமை வகித்தாா். பொறியாளா் நன்னிலம் ஜெயராமன், மாநிலப் பொருளாளா் காயாம்பூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களில் மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்ப்டடது. வட்ட யாதவ ஆலோசனை மையத் தலைவராக ப.கண்ணன், துணைத் தலைவா்களாக பிரகாஷ், ஐயப்பன், செயலாளா் பாலு, இணைச் செயலாளா்களாக ஆா்.பாலகிருஷ்ணன், ராமு மற்றும் பொருளாளராக ஆா். இளங்கோ ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com