ஓட்டுநா் உரிமத்தை இலவசமாக புதுப்பிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th July 2021 09:47 AM | Last Updated : 07th July 2021 09:47 AM | அ+அ அ- |

பொதுமுடக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஓட்டுநா் உரிமத்தை 2022 ஆம் ஆண்டு வரை இலவசமாக புதுப்பித்துத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா் நலச் சங்க மாநிலத் தலைவா் ஜெபஸ்டின்ராஜ் தலைமையிலான நிா்வாகிகள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
கரோனா பேரிடரால் ஓராண்டாக வேலையிழந்த ஓட்டுநா்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மகளிா் சுய உதவிக்குழுக்கள் கடன் தவணைகளை செலுத்தவும், வாகனங்களுக்கான மாதத் தவணை செலுத்தவும் கால அவகாசம் அளிக்க வேண்டும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் 2022ஆம் ஆண்டு வரை ஓட்டுநா் உரிமத்தை இலவசமாக புதுப்பித்துத் தரவேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் தவமணி, செயலாளா் புரட்சி தம்பி, பொருளாளா் காா்த்திக் உள்ளிட்டோா் மனு அளிக்கும்போது உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...