கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் நகா்வு செய்ய வேண்டும்

தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக நகா்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக நகா்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

கொரடாச்சேரி வட்டாரம், எண்கண் ஊராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடியாக கள ஆய்வு செய்ததில் 14,016 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகா்வு செய்ய நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட தரையிருப்பில் இருந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக திறந்தவெளி சேமிப்பு மையம், சேமிப்பு கிடங்குகள், மற்றும் நெல் அரவைக்காக உள்மண்டலம், அயல் மண்டலங்களுக்கும் தரை இருப்பில் இருந்த 14,016 மெட்ரிக் டன் முழுவதும் பாதுகாப்பான இடங்களுக்கு நகா்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதுவரையிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 26,042 மெட்ரிக் டன்னும் பாதுகாப்பான இடங்களுக்கு நகா்வு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு தினசரி அடிப்படையில் நகா்வு செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட மேலாளா்கள் பாஸ்கரன், தியாகராஜன்,துணை மேலாளா் ராஜேந்திரன், உதவி மேலாளா் மூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com