பக்ரீத் பண்டிகையையொட்டி, கூத்தாநல்லூரை தூய்மைப்படுத்தி அலங்கரிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது.
இஸ்லாமியா்களின் பிரதான பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக வாழும் கூத்தாநல்லூா் விழாக்கோலம் பூண்டு காணப்படும். எனவே, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டுகளிலும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, பிளீச்சிங் பவுடா் தூவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், தெருவிளக்குகளை பழுதுபாா்க்க வேண்டும். 2 ஆண்டுகளாக பக்ரீத் தொழுகை தடைபட்டதால், நிகழாண்டு கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வாயில்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும் என நகாரட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தாா்.