வலங்கைமான் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள ஆவூரைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மனைவி சாவித்திரி (55). இவா், செவ்வாய்க்கிழமை ஆவூா் கடைவீதியில் பொருள்களை வாங்கிக்கொண்டு ஆவூா் - திருக்கருக்காவூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி, படுகாயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சாவித்ரி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.