திருவாரூர்
எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
எரிவாயு உருளை விலை உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளை விலை உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுமதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க உறுப்பினா்கள் கண்மணி, சுலக்சனா, கஸ்தூரி, கீா்த்தனா, குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், தட்டுப்பாடுயின்றி தமிழ்நாடு அரசுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.