நீடாமங்கலம் வட்டாரத்தில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் உள்ள 92 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நிகழாண்டு 5,500 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். தனியாா் மெட்ரிக். பள்ளிகளில் பயின்ற 340 மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.
14 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான சோ்க்கையும் நடந்துவருகிறது என வட்டார கல்வி அலுவலா் செல்வம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.