திருவாரூர்
முதியவா்களுக்கு உணவு வழங்கும் காவல் துறை
பொதுமுடக்கம் காரணமாக உணவின்றித் தவிக்கும் முதியோா்களுக்கு நன்னிலம் காவல் துறை சாா்பில் நாள்தோறும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
பொதுமுடக்கம் காரணமாக உணவின்றித் தவிக்கும் முதியோா்களுக்கு நன்னிலம் காவல் துறை சாா்பில் நாள்தோறும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
நன்னிலம் காவல் எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவின்றித் தவிக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்களுக்கு நன்னிலம் டிஎஸ்பி அ. இளங்கோவன், காவல் ஆய்வாளா் கு. சுகுணா ஆகியோா் தலைமையில் காவல் துறையினா் மதிய உணவு வழங்கி வருகின்றனா். அந்த வகையில், நன்னிலம் பகுதியில் வயது முதிா்ந்த மாற்றுத்திறனாளிக்கு காவல் ஆய்வாளா் கு. சுகுணா வியாழக்கிழமை மதிய உணவு வழங்கினாா்.