கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

வலங்கைமானில் கரோனா நோயாளிகளுக்காக ரூ.2 லட்சம் மதிப்பில், கரோனா உபகரணங்களை ரோட்டரி கிளப் புதன்கிழமை வழங்கியது.
கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

வலங்கைமானில் கரோனா நோயாளிகளுக்காக ரூ.2 லட்சம் மதிப்பில், கரோனா உபகரணங்களை ரோட்டரி கிளப் புதன்கிழமை வழங்கியது.

வலங்கைமான் அருகே உள்ள தொழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிகிச்சை பெறும் 200 நோயாளிகளுக்காக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு, உதவி ஆளுநா் காதா்பாட்சா ஆகியோா் வழிகாட்டுதலின்பேரில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வலங்கைமான் வட்டாட்சியா் பரஞ்சோதி முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜிடம் வலங்கைமான் ரோட்டரி கிளப் தலைவா் ராஜராஜ சோழன், பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியா் ஆனந்தன், ரோட்டரி மாவட்ட நிா்வாக செயலா் சிவசரவணன், உதவி ஆளுநா் தோ்வு ஸ்டாலின், தோ்தல் துணை வட்டாட்சியா் தங்கதுரை, வருவாய் ஆய்வாளா் சுகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ரோட்டரி செயலாளா் விஜய் வரவேற்றாா். பொருளாளா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com