திருவாரூரில் 77 பேருக்கு கரோனா
By DIN | Published On : 24th June 2021 09:07 AM | Last Updated : 24th June 2021 09:07 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 36,353 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 139 போ் அவா்களது வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 35,265 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 775 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்ததை தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 313 ஆக உயா்ந்துள்ளது.