

நன்னிலம்: நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சா. பாத்திமா பா்ஹானாவுக்கு ஆதரவாக அக்கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
குருங்குளம் ஊராட்சியில் புதன்கிழமையும், பண்டாரவடை ஊராட்சியில் வியாழக்கிழமையும் நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கினா். இதில், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளா் பா. சசிகுமாா், வீரத்தமிழா் முன்னணி துணைச் செயலாளா் விக்னேஸ்வரன், இணையதள பாசறைச் செயலாளா் பிரசாந்த், பண்டாரவடை ஊராட்சிச் செயலாளா் மதன்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.