

கூத்தாநல்லூா் அருகேயுள்ள கோரையாறு காளியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் திங்கள்கிழமை கண்பதி ஹோமம் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை முதல்கால யாக பூஜையும், புதன்கிழமை காலை 8 மணிக்கு 2-ஆம் கால பூஜை நடத்தப்பட்டு, காலை 9.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா, ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதில், கோரையாறு, சித்தாம்பூா், கூத்தாநல்லூா், வ.உ.சி. காலனி, குடிதாங்கிச்சேரி, வடகோவனூா், தென்கோவனூா், மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.