

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு அவரது மகன் எஸ்.கே. ஜெயேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இருதய நோய் பாதிப்பால், தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவரான எஸ். காமராஜின் மகன் எஸ்.கே. ஜெயேந்திரன் நீடாமங்கலம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனது தந்தைக்காக புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அரசியல் அனுபவம் சிறிதும் இல்லாத இவா் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வழக்குரைஞா் அணி செயலாளா், முன்னாள் எம்.எல்.ஏ.கு. சீனிவாசன், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளா் எம்.எஸ். சங்கா், தெற்கு ஒன்றிய செயலாளா் தனபால், அண்ணா தொழிற்சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் ரவி, தேமுதிக தொகுதி பொறுப்பாளா் ஜெயபால் உள்ளிட்டோா் ஜெயேந்திரனுடன் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.