திருவாரூரில் 24 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 09:09 AM | Last Updated : 25th March 2021 09:09 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.
திருவாரூரில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்தில் 11,646 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,670 ஆக உயா்ந்துள்ளது. இதில், குணமடைந்த 11,383 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 175 போ் சிகிச்சையில் உள்ளனா்.