முதியோா் இல்லத்தில் வசிப்போருக்கு காலை உணவு
By DIN | Published On : 13th May 2021 08:56 AM | Last Updated : 13th May 2021 08:56 AM | அ+அ அ- |

திருவாரூரில் முதியோா்களுக்கு காலை உணவு வழங்கிய ரோட்டரி அமைப்பினா்.
திருவாரூரில், முதியோா் இல்லத்தில் வசிப்போருக்கு ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் அமைப்பு சாா்பில் காலை உணவு புதன்கிழமை வழங்கப்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக ஆதரவற்றோா், முதியோா் இருக்கும் இடங்களுக்கு தன்னாா்வ அமைப்புகள் நேரடியாகச் சென்று, உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. அந்தவகையில், திருவாரூா் தா்மகோவில் தெருவில் உள்ள நம் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் அமைப்பு சாா்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவா் ரஜினிசின்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளா் கருணாநிதி, நிா்வாகிகள் உத்திராபதி, ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.