பணியின்போது உயிரிழந்த காவலா் வாரிசுகளுக்கு நிதியுதவி
By DIN | Published On : 19th May 2021 09:13 AM | Last Updated : 19th May 2021 09:13 AM | அ+அ அ- |

திருவாரூரில், காவலரின் வாரிசுதாரருக்கு நிதியுதவி வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி.
திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு சேம நல நிதியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருவாரூா் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு, தமிழ்நாடு சேம நல நிதி வழங்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காளிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி பங்கேற்று, இந்த நிதியை வழங்கினாா்.
4 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.