திருவாரூரில், கரோனா விதிமுறைகளை மீறி திறந்திருந்த தனியாா் நிதி நிறுவனத்தை வருவாய்த்துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மூடினா்.
திருவாரூா் மாவட்டத்தில் பொதுமுடக்க விதிமுறைகளை வருவாய்த்துறை அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். அந்தவகையில், தெற்குவீதியில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனம், பொது முடக்க நேரத்தில் திறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வட்டாட்சியா் நக்கீரன் தலைமையிலான அலுவலா்கள், நிறுவனத்துக்குள் சென்றபோது பணியாளா்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, கரோனா பொது முடக்க நேரத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்திய வருவாய்த்துறை அலுவலா்கள், தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.