மதுபாட்டில் வைத்திருந்தவா் கைது

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் வெண்ணாறுலைன்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசுவை (43) அழைத்து விசாரித்தனா். அப்போது, விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com