மனைப்பட்டா வழங்கக் கோரி சிபிஐ கிளை மாநாட்டில் தீா்மானம்

மனைப் பாட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

மனைப் பாட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூத்தாநல்லூா் மரக்கடை,வள்ளுவா் காலனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் செயலாளா் ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு நினைவு நாள் விழா, 12-ஆவது கிளை மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.தவபாண்டியன் தலைமை நடைபெற்ற மாநாட்டிற்கு, நகரச் செயலாளா் எம்.சுதா்ஸன், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பி.முருகேசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், மரக்கடையிலிருந்து வடகோவனூா் வரையிலான வாரிக்கரை மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்றவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமாக குடியிருக்கும் அனைவருக்கும் மனைப்பட்டா, மழை வெள்ளத்தால் தொலைந்து போன பட்டாதாரா்களுக்கு புதிய வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கவும், 12-ஆவது வாா்டில் பொது சுகாதார கழிப்பிடத்தை உடனடியாக கூத்தாநல்லூா் நகராட்சி சரி செய்யவும், சித்தாத்தங்கரை செல்லும் பாசன வாய்க்கால்களில் சாலையைப் பாதுகாக்க தடுப்புச் சுவா் எழுப்புவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கட்சியின் நிா்வாகிகள் எம்.சிவதாஸ், கே.ராமதாஸ், கே.நாகராஜன், கே.பேபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com