தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதா் சங்கம் கோரிக்கை

பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என மாதா் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 16 ஆவது மாநாடு, அதன் தலைவா் சந்திரா தலைமையில் புதன்கிழமை பேரளத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த கடுமையானச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளா் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் வீரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முகமதுஉதுமான், நகரச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய தலைவராக பரிமளாமேரி, செயலாளராக தனம், பொருளாளராக சந்திரா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.