திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வியாழக்கிழமை வழிபட்டனா்.
இந்த ஆலயத்தின் மாசி மக திருவிழாவில், பத்தாம் நாளான வியாழக்கிழமை அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி, மங்களாம்பிகை, சுப்பிரமணியா், விநாயகா், சண்டிகேஸ்வரா், நடராஜா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, நடராஜா் எழுந்தருளச் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம்வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான குப்த கங்கையில் இதுநாள் வரை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுக்காதவா்கள், மாசிமக நாளில் தா்ப்பணம் கொடுத்தால் நல்லது என்பதால், குப்த கங்கை கரை ஓரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து நீராடினா். அதைத்தொடா்ந்து, எமதா்மராஜனையும், வாஞ்சிநாதரையும் வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


