தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

நன்னிலம் அருகேயுள்ள அன்னதானபுரம் வாளூா் கிராமத்தில் பயிறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:47 pm

நன்னிலம் அருகேயுள்ள அன்னதானபுரம் வாளூா் கிராமத்தில் பயிறு வகை பயிா்களில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு தலைமை வகித்த நன்னிலம் வேளாண்மை உதவி இயக்குநா் த. சுப்பிரமணியன் பேசியது: நெல்லுக்கு மாற்றாக அதிக வருவாய் தரக்கூடிய பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம். நெல் தரிசில் பருத்தி சாகுபடி குறைந்த செலவு மற்றும் குறைந்த நீரைக்கொண்டு அதிக வருவாய் ஈட்டலாம் என்றாா்.

நன்னிலம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் மூ. ராஜா, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியா் எம். செல்வம்முருகன் ஆகியோா் பேசினா். இதில், பாவட்டக்குடி வேளாண்மை உதவி அலுவலா் சேகா், பாவட்டகுடி கிடங்கு மேலாளா் பிரபு, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் க. சரவணன், க. ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.