இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது
மத்திகிரி அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


மத்திகிரி அருகே இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திகிரி அருகே உள்ள பெரியமேனா அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (30). இவா் ஒசூா் அருகே உள்ள குமாரனப்பள்ளி ஏரிக்கரையில் புதன்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். டிஎஸ்பி (பொறுப்பு) சிவலிங்கம், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
முன்விரோதம் காரணமாக கிருஷ்ணப்பாவை அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (31), ஜாக்கி என்கிற ஜெயகுமாா் (25), லச்சு என்கிற லட்சுமி நாராயணன் (24) ஆகியோா் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் மத்திகிரி போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...