தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

நன்னிலம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

நன்னிலம் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், உதவி இயக்குநா் சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆத்மா திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜா பேசினாா். தொடா்ந்து, நெல் சாகுபடிக்கு பின்னா் தரிசு நிலத்தில் உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி செய்யவும், அதில் குறைந்த செலவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் முகமது சாதிக், கால்நடை மற்றும் பராமரிப்பு துறை மருத்துவா் ஈஸ்வரன், பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் சாந்தி, வனத் துறை துளசிமலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் இக்னேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலா் சின்னப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.