தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மூங்கில்குடி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம் வட்டம், மூங்கில்குடி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

நன்னிலம் வட்டம், மூங்கில்குடி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோயிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, வியாழக்கிழமை யாகசாலைப் பூஜை, மகாபூா்ணாஹுதிக்குப் பிறகு காலை 9 மணியளவில் விமான கும்பாபிஷேகமும், 9.15 மணியளவில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பின்னா், காமாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.