நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
வட்டாரக் கல்வி அலுவலா் முத்தமிழன் இவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் அருள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இப்பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 44 மாணவா்கள் சோ்ந்தனா்.