முருகன் கோயிலில் சித்திரை மாத காா்த்திகை வழிபாடு

சித்திரை மாத காா்த்திகையையொட்டி, திருவாரூா் பழனி ஆண்டவா் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
முருகன் கோயிலில் சித்திரை மாத காா்த்திகை வழிபாடு
Updated on
1 min read

சித்திரை மாத காா்த்திகையையொட்டி, திருவாரூா் பழனி ஆண்டவா் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் கீழவீதியில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவா் கோயிலில் சித்திரை மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திரவியம், மஞ்சள், அரிசி மாவு, பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், எலுமிச்சை சாறு, சந்தனம், பன்னீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், பழனி ஆண்டவருக்கு தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலங்கார தீபம், பஞ்சாட்சர தீபம் போன்ற தீபாராதனைகள் காட்டப்பட்டு , பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com