நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசனை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக பாஜக நிா்வாகி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசனை கண்டித்து, இந்து முன்னணி சாா்பில் கடந்த புதன்கிழமை (செப். 7) ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாவட்ட துணைத் தலைவா் சதா.சதீஷ், முத்தரசன் உருவப்படத்தை அவமதித்தாராம்.
இதுதொடா்பாக, சதா.சதீஷ் உள்ளிட்ட சிலா் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் சிபிஐ ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அப்போது, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன்சென்று இப்புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். இப்புகாரை பெற்றுக்கொண்ட மன்னாா்குடி டிஎஸ்பி பாலச்சந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
இந்நிலையில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தன் மற்றும் போலீஸாா் இப்பிரச்னை தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனா். தொடா்ந்து, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சதா.சதீஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.