காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

நன்னிலம் அருகே பள்ளி மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் குறித்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடையே பேசும் காவல் ஆய்வாளா் சுகுணா.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடையே பேசும் காவல் ஆய்வாளா் சுகுணா.
Updated on
1 min read

நன்னிலம் அருகே பள்ளி மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் குறித்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அச்சுதமங்களம் மேல்நிலைப் பள்ளியில் நன்னிலம் காவல் நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது, பேருந்தில் எவ்வாறு பயணம் செய்வது, சைபா் கிரைம் மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்றவை குறித்து காவல் ஆய்வாளா் சுகுணா விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பா. சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com