அரசுப் பள்ளியில் சுதந்திர தின அமுதப் பெருவிழா

நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின அமுதப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் சுதந்திர தின அமுதப் பெருவிழா
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகேயுள்ள ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின அமுதப் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஏற்பாட்டில், பள்ளித் தலைமையாசிரியா் தேவேந்திரன் (பொ) தலைமையில் நடைபெற்ற விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் பெரியாா் ராமசாமி சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்கள் நாட்டுக்கு ஆற்றிய தியாகம் குறித்து பேசினாா். விழாவையொட்டி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் வகையில் நடைபெற்ற பேச்சு மற்றும் ஓவியப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை போற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com