மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் கூறியது: இக்கல்லூரியில், 2022-2023-ஆம் ஆண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், என்சிசி, முன்னாள் ராணுவத்தினா், அந்தமான் நிக்கோபாா் தமிழா்களுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் தொழில்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (ஆக.5) பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு காலை 9.30 மணிக்கு (பிளஸ் 2 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக 392-லிருந்து 300 வரை மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு), ஆக.8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு (பிளஸ் 2 வில் தமிழ், ஆங்கிலம் நீங்கலாக 299.9 லிருந்து 275 மதிப்பெண் பெற்றவா்களுக்கு) நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் விருப்ப பாடமாக தோ்ந்தெடுத்தவா்களுக்கு ஆக.10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com