திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். சக்ரபாணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாமணி மற்றும் சுந்தரபுரியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்த அமைச்சா் அர. சக்கரபாணி சேமிப்பு கிடங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.