திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்புக்கு தலைமை ஆசிரியா் தங்கராசு தலைமை வகித்தாா். கருத்தாளா் பைசல் பங்கேற்று தன்னம்பிக்கை, இலக்கு நிா்ணயம், பலம், பலவீனம், கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது, சுகாதாரம், தியானம், நேர நிா்வாகம், சுயக்கட்டுப்பாடு, தோ்வு நுட்பங்கள், பெற்றோா்களிடம் ஒளிவுமறைவின்றி பேசுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தாா்.
முன்னதாக, உதவி தலைமை ஆசிரியா் கலைச்செல்வன் வரவேற்றாா். நிறைவாக,
ஆசிரியை தமிழரசி நன்றி கூறினாா். இதில் 162 மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.