மன்னாா்குடி அருகே கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தை ஓட்டி, 3 வயது சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இளைஞருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மன்னாா்குடி குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மன்னாா்குடியை அடுத்த மேல்பாதியை சோ்ந்தவா் அய்யாவு - கனிமொழி தம்பதி. இவா்களது மகன் கிருத்திக் (3). அய்யாவுவின் சகோதரா் கீழ சன்னதி தெருவை சோ்ந்த நித்தியானந்தம் மகன் கோகுல் (29).
கடந்த 2021 செப்டம்பா் மாதம் வடுவூா் தென்பாதியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென் விட்டு கோகுல் மற்றும் கிருத்திக் இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனா். அப்பொழுது அந்த வழியாக நெல் மூட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்ாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் கிருத்திக் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக கோகுல் மீது வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம்-1 இல் நடைபெற்று வந்தது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக கோகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி அமிா்தீன் தீா்ப்பு வழங்கினாா்.