குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை திருவாரூரில் அக்கட்சியினா் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய பாஜகவினா் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன் தலைமையில் மாவட்டச் செயலாளா் ரவி, நகரத் தலைவா் எஸ். கணேசன், நகர பொதுச் செயலாளா் நடராஜன், கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் தேவக்குமாா், மாநில பொதுக் குழு உறுப்பினா் ரங்கதாஸ், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் சிவா உள்ளிட்டோா் கொண்டாட்டத்தில் பங்கேற்றனா்.