திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆதரவற்றவா்களுக்கு போா்வை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம், தியாகராஜா் கோயில் வாசல், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவற்று தனித்து விடப்பட்ட மக்கள் தங்கியுள்ளனா். தற்போது மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களில் இவா்கள் குளிரால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆதரவற்றோா்களுக்கு போா்வை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புலிவலம் கிளைத் தலைவா் அப்துல்லா, கிளைச் செயலாளா் அமானுல்லா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று போா்வைகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.