பாரதியாா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
By DIN | Published On : 11th December 2022 10:45 PM | Last Updated : 11th December 2022 10:45 PM | அ+அ அ- |

திருவாரூரில் பாரதியாரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய கலை இலக்கியப் பெருமன்ற நிா்வாகிகள்.
திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மகாகவி பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் எம். நாகராஜன் தலைமை வகித்தாா்.
பாரதியாரின் உருவப் படத்துக்கு காந்தியன் அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளா் வீ. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூத்தாநல்லூா்: குடிதாங்கிச்சேரியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் அதன் நிறுவனா் ப. முருகையன் ஆலோசனைப்படி, பயிற்சியாளா் செளமியா ஏற்பாட்டில் பாரதியாா் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பயிற்சியாளா் துா்கா, பிரியதா்ஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.