மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.23) மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.