சிலம்பப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

திருவாரூரில் சோழதேசக் கோப்பை சிலம்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
சிலம்பப் போட்டிகளை தொடக்கி வைத்து பேசும் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
சிலம்பப் போட்டிகளை தொடக்கி வைத்து பேசும் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன்.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூரில் சோழதேசக் கோப்பை சிலம்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தொடக்கி வைத்தாா். இதில், திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரா்கள் பங்கேற்றனா். 3 வயதிலிருந்து 6 வயது வரை, 7 வயதிலிருந்து 13 வயது வரை, 14 வயதிலிருந்து 18 வயது வரை, 18 வயதுக்கு மேல் என 4 பிரிவுகளாக சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், கோட்டாட்சியா் சங்கீதா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் அசோகன், ஆடலரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com