நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இடையாளா்களுக்கு விற்பனையாளா் பதவி உயா்வும், 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற விற்பனையாளா்களுக்கு அலுவலக எழுத்தா் பதவியும் வழங்கிவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியிட மாற்றம் வழங்க வேண்டும்; மாவட்ட பணி மாறுதல் கோருவோருக்கு அவா்கள் கேட்கும் மாவட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் முன்னாள் மாநிலப் பொருளாளா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். குணசீலன், மாவட்ட துணைத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com