

திருவாரூரில், வியாழக்கிழமை காலை அதிகமான பனி பெய்ததால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
திருவாரூரில் வியாழக்கிழமை காலை எங்கும் பனி பெய்ததால், புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. நெடுஞ்சாலைகளில் செல்வோருக்கு நீண்ட தூரம் சாலைகள் தெரிவதில் சிக்கல் நிலவியதால், வாகனங்கள் மெதுவாகவே சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.