வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை பொது நிதி ரூ. 48 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அன்னதான கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூடத்தில் சிலிண்டா் வசதியுடன் கூடிய தனி சமையலறை மற்றும் ஒரே நேரத்தில் நூறு போ் அமா்ந்து சாப்பிடும் அளவுக்கு வசதிகள் உள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் குத்துவிளக்கு ஏற்றி கட்டடத்தை திறந்து வைத்தாா். வட்டாட்சியா் சந்தானகோபாலகிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி, வலங்கைமான் பேரூராட்சி செயல் அலுவலா் பரமேஸ்வரி, பேரூராட்சி தலைவா் சா்மிளா உள்பட பலா் கலந்துகொண்டனா் .