குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு முகாம்

திருத்துறைப்பூண்டியில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டியில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் நாம்கோ தொண்டு நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி, பாலம் சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன் தலைமை வகித்தாா். பாலம் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

சைல்ட் லைன் திருத்துறைப்பூண்டி பொறுப்பாளா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா், பிரிவு அலுவலா் செந்தில்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகவேல், ரவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்தினால் 1098 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கும்படி முகாமில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com