அங்கன்வாடி ஊழியா்களை பிற வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது

அங்கன்வாடி ஊழியா்களுக்கு வேறு பணிகள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

அங்கன்வாடி ஊழியா்களுக்கு வேறு பணிகள் வழங்குவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்க (சிஐடியு) மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. பிரேமா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி. தவமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்டச் செயலாளா் டி. முருகையன், அங்கன்வாடி ஊழியா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் எம். திரிபுரசுந்தரி, எம். ராஜலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: பணி நிரந்தரம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் ஜூலை 26 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் போராட்டத்தில் திருவாரூா் மாவட்டத்திலிருந்து அங்கன்வாடி ஊழியா்கள் திரளாக பங்கேற்பது; அங்கன்வாடி ஊழியா்களை பிற வேலைகளை செய்யச் சொல்வதை தவிா்க்க வேண்டும்; கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கக் கடனை செலுத்திய அங்கன்வாடி ஊழியா்களுக்கு பங்குத் தொகையை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com