கறவைமாடு பராமரிப்பு கடன் உதவி

மன்னாா்குடியில் பாங்க் ஆஃப் பரோடா மூலம் 174 பயனாளிகளுக்கு கறவைமாடு பராமரிப்புக் கடனாக ரூ.29.52 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பயனாளிக்கு கடன் தொகைக்கான காசோலையை வழங்கும் மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மனோகரன்.
நிகழ்ச்சியில் பயனாளிக்கு கடன் தொகைக்கான காசோலையை வழங்கும் மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மனோகரன்.

மன்னாா்குடியில் பாங்க் ஆஃப் பரோடா மூலம் 174 பயனாளிகளுக்கு கறவைமாடு பராமரிப்புக் கடனாக ரூ.29.52 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி கூட்டுறவு பால் வழங்கல் சங்கத் தலைவா் வி.எம். கலியபெருமாள் தலைமை வகித்தாா். மன்னாா்குடி கிளை பாங்க ஆஃப் பரோடா வங்கியின் விவசாயப் பிரிவு அலுவலா் மோனிகா முன்னிலை வகித்தாா்.

மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் பங்கேற்று, 174 பயனாளிகளுக்கும் கறவைமாடு பராமரிப்புக் கடனாக தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.29. 52 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு பால் வழங்கல் சங்க செயலா் வடிவு, சங்க ஆடிட்டா் ஆா். நாகேந்திரன், பயனாளிகள் குழு ஒருகிணைப்பாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, வங்கியின் முதன்மை மேலாளா் சுவேது சாட்டா்ஜி வரவேற்றாா். நிறைவாக, வங்கி அலுவலா் ஜி. ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com