மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்கம்
By DIN | Published On : 16th June 2022 10:27 PM | Last Updated : 16th June 2022 10:27 PM | அ+அ அ- |

மன்னாா்குடியை அடுத்த மூணாம்சேத்தியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிா் வாழ்வாதார சேவை மையம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்து, சேவை மையத்தை தொடங்கிவைத்தாா். மேலும், முதல்கட்டமாக 20 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நுண்தொழில் நிறுவன நிதியாக மொத்தம் ரூ.9.55 லட்சத்திற்கான காசோலைகளையும், உபகரணங்களையும் வழங்கினாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, 2 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க தலா ரூ.75 ஆயிரத்திற்கான வங்கி காசோலையை வழங்கினாா். நிகழ்ச்சியில், மன்னாா்குடி வட்டாட்சியா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, திட்ட செயல் அலுவலா் செல்வம் வரவேற்றாா். நிறைவாக, ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.