மக்கள் நோ்காணல் முகாம்: 131 பேருக்கு நலத் திட்ட உதவி

கூத்தாநல்லூா் வட்டம், புனவாசல் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
புனவாசலில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன்.22_)___knr_1__1506chn_209_5
புனவாசலில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன்.22_)___knr_1__1506chn_209_5
Updated on
1 min read

கூத்தாநல்லூா் வட்டம், புனவாசல் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கீா்த்தனா மணி முன்னிலை வகித்தாா். முகாமில், பட்டா மாற்றம், இவவச வீட்டு மனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கைப்பேசி என 131 பயனாளிகளுக்கு, ரூ. 8.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் வழங்கினாா்.

அப்போது அவா், ‘முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்கள் தேடிச் செல்லும் அரசாக இல்லாமல், மக்களைத் தேடிச் செல்லும் அரசாக செயல்படுகிறது’ என்றாா்.

முகாமில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஐ.வி. குமரேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, வட்டாட்சியா் பரஞ்ஜோதி, வருவாய் ஆய்வாளா் ஜோதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com